பணக்கார நாயும் உருப்படாத இளைஞர்களும்

அது ஒரு பணக்கார வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் பிறந்ததிலிருந்தே அந்த நாய் வீட்டில் வழங்கப்பட்ட உணவை மட்டுமே உண்டு பழக்கப்பட்டது அப்படி இருக்கும்போது..

ஒரு நாள் வீட்டு மதில் ஓட்டைவளியாக வீதியைப் பார்த்தது சில தெருநாய்கள் குப்பைத்தொட்டியொண்றை கிளறி சண்டையிட்டு அங்கு கிடைத்த உணவை உண்டன அந்தக்காட்சியைப்பார்தவுடன் தெருவில் செண்று அந்த உணவை உண்ணவேண்டுமென்று ஒரு ஆசை பிறந்தது மறுநாள் வீட்டுக்காரன் வேலைக்குப்புறப்பட்டான் அவனது காரின் பின்னாலேயே செண்று ஒருவளியாக வெளியே வந்துவிட்டது.

தற்போது அதனுடைய இலக்கு உணவு தேடுவது அருகிலிருந்த குப்பைத்தொட்டியைப் பார்த்தது அதற்குக் கிடைத்தது உணவல்ல ஏமாற்றம் மட்டும்தான். சரியெண்று சிறிது தூரம் நடந்தது அங்கு ஒரு குப்பைத்தொட்டியை சுற்றி சில நாய்கள் உணவுக்காக சண்டையிட்டுக்கொண்டிருந்தன சற்ரும் யோசிக்காமல் களத்தில் குதித்தது.. பாவம் பணக்கார வீட்டில் செகுசாகவே வாழ்ந்து பழக்கப்பட்டதல்லவா மற்ற நாய்களிடம் கடிவாங்கிக்கொண்டு லோ லோ லோ எண்று கத்திக்கெண்டே ஓடியது.



மதியமானது பசி வயிற்ரைக்கிள்ளியது அங்கும் இங்கும் உணவு தேடி அலைந்தது கடைசியாக தெருநாய்கள் விட்டுச்செண்ற ஒரு குப்பைத்தொட்டியை கிளறி ஒரு காய்ந்துபோன எலும்புத்துண்டை எடுத்தது.

பசி தாங்கமுடியாமல் காய்ந்துபோன எலும்பைக் கடிக்கத்தெடங்கியது எலும்பு நன்கு காய்ந்திருந்ததால் அதன் வாயைக் கீறியது இரத்தம் கசிய அந்த இரத்தத்தை சுவைக்க ஆரம்பித்தது முதல்முதலாக இரத்தத்தை சுவைப்பதால் அது நினைத்தது இரத்தம் எலும்பிலிருந்துதான் வருகிறதெண்று.

இரத்தருசியாலும் பசியாலும் மேலும் ஆவேசமாகக் கடித்தது இதை பார்த்த ஒரு வளிப்போக்கன் சென்னான் ஏய் பைத்தியக்காற நாயே நீ சுவைப்பது உன்னுடைய இரத்தமென்றான் அதை ஏற்கமறுத்த நாய் தெடர்ந்து எலும்பைக் கடித்து தனது இரத்தத்தையே சுவைத்தது.

இந்த நாய் அற்ப சுவைக்காக தன்னைத்தானே அளித்துக்கொள்கிறது இந்த நாயைப்போலவே சில நன்பர்கள் அற்ப மகிழ்ச்சிக்காக தாய் தந்தையை ஏமாற்ரிக்கெண்டு படிக்காமல் படிப்பிற்காக பெற்ரோர் தரும் பணத்தை கண்ட பெண்களுக்கு செலவுசெய்துகொண்டு தன்னையும் அளித்துக்கெண்டு பெற்ரோரையும் ஏமாற்றும் இவர்களை விட தன்னைமட்டும் அளித்துக்கொள்ளும் மேற்கண்ட நாய் மேலானது.

அடுத்ததகக சிகரற் மற்ரும் மது அருந்தி தன்னை தானே வருத்தி சிற்ரின்பம் காண்பவர்களும் அந்தப் பணக்காற வீட்டு நாயைப்போண்று ஜந்தறிவு படைத்த மடையர்களே...

இதை வாசித்து சிலர் திருந்தலாம் சிலர் கோபப்படலாம்
அறிவுக்கண்ணைத்திறப்பவர்கு எனது வாழ்த்துக்கள்
இதை வாசித்தும் திருந்தாத ஜந்தறிவு ஜீவன்களுக்கு எனது அனுதாபங்கள்.
Powered by Blogger.